Labels

Wednesday, July 6, 2016

53. ஆயுர்வேதம் ஆரோக்கியம் கூட்டும் 3 !








ஆயுர்வேதம் ஆரோக்கியம் கூட்டும் 3 !

ஆடி மாதம் ஆயுர்வேத எண்ணை போடல் ஆரோக்கியம் கூட்டும்.

கதகளி ஆட்டக்கார்ர்கள் 80 – 90 வயது வரை ஆரோக்கியமாக ஆடுவதற்குக் காரணம் எண்ணை போடல் ஆகும்.

நாம் ஏன் நமது ஆரோக்கியத்தைப் பேண வேண்டும்
1.   மற்றவருக்குத் தொந்தரவு கொடுக்காமல், நம் அடிப்படைத் தேவைகளை நாமே நிறைவேற்றிக் கொள்ள
2.   நமது அனுபவம் மற்றவர்களுக்குப் பயன்பட
3.   குடும்பத்தினர், உறவினர் ஆகியவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள், உதவிகள் ஆகியவற்றை நிறைவேற்ற
  
ஆடி மாதத்தை கற்கடகம், ராமாயண மாதம், பஞ்ச மாதம், ஆயுர்வேத மாதம் எனவும் கேரளாவில் கூறுவார்கள். ஆனி 15 முதல் மழையும், வெய்யிலும், காற்றும் தினசரி, உடனுக்குடன் மாறி மாறி வரும். தக்‌ஷினாயன த்தில் சூரியன் பூமிக்கு மிக அருகில் இருக்கும் காலமாகும் இது. வர்ஷ ரிதுமழை சீஸன்என்கிறார்கள். இது வாத பூமியாகும். இந்தப் பருவத்தில் பச்சைக் காய்கறிகளில் துவர்ப்பு, புளிப்பு கூடும். பல நோய்கள் உண்டாகவும் பரவவும் ஏதுவான காலமாகும். அதனிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கற்கடக கஞ்சி குடிப்பார்கள். எண்ணெய் போட்டு உடலை வலுப்படுத்திக் கொள்வார்கள். வேலைக்குச் செல்பவர்கள் காலை ஐந்தரை மணிக்கே வந்து எண்ணெய் போட்டுச் செல்கிறார்கள். சுக சிகிட்ஷா என்கிறார்கள்

தமிழகத்தைப் போல் இங்கும் (கேரளாவில்தான்) ஆடி அமாவாசை, ஆடித் திருவாதிரை ஆகிய விழாக்களை விஷேசமாகக் கொண்டாடுகிறார்கள். ராமாயணத்தை வீடுகளிலும், விஷ்ணு கோவில்களிலும் படிக்கிறார்கள்.

பிரேஸில் கால் பந்தாட்ட வீரர் நெய்மாருக்கு 2014ல் அவரது காயங்களுக்கு சிகிச்சை அளித்து முன்போல் விளையாட கேரள அரசு உத்தரவாதம் அளித்து அழைப்பு விட்டிருந்தது.

குடிதண்ணீரில் -  தாக சமனி - பதிமுகம் எனும் மரத்திலிருந்து மரத் துகள்களை வைத்துத் தயாரிக்கப்படும் பவுடர். இதை தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்துக் குடிக்கிறார்கள். கிருமிநாசினி.. இதில் தாகம் தவிர்க்கும் செங்கருங்காலியும் சிறிதளவில் வெட்டிவேர், நன்னாரி, சுக்கு, மல்லி, கரிங்கலி முதலியவைகளும் கலந்திருக்கும்.

உட்கொள்ள மருந்து - திரிபலம் – மூன்று பழம் – கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய். இவை  மலமிளக்கி, ஜீரண சக்தி, இரத்த சுத்திகரிப்பு என செயல் படுகின்றன.
அஷ்டவர்க்க கஷாயம் - 8 விதமான இயற்கை மருந்துகள் - இரவிலும், காலையிலும் -  வயிற்றுப் பொருமல், மூட்டு வலிகளைப் போக்கும். மற்ற மாத்திரைகள் தேவையைப் பொறுத்துத் தருகிறார்கள்.

தலைக்குபலாசு அஷ்வகந்தாதீ லஷாதி தைலம்

தலைக்கு - ராஸநாதி சூரணம் - ஜலதோஷம் வராமல் தடுக்க

உடம்புக்கு தேய்த்துக்கொள்ள - கற்பூர, கொத்தஞ்சுக்காதி, முருக, தன்வந்த்ரம் கலந்த எண்ணை – வாத பித்த கப உடம்பைப் பொருத்து

கிளிவெள்ளைப் பூண்டு, தேங்காய், கருநொச்சி, ஆடுலோடகம்(ஆடுதொடா), ஆமணக்கு, எருக்கு, கொத்த்ஞ்சுக்காதி, புளி இலை, முருங்கை, புங்க இலை, நார்த்த இலை இவற்றில் சில கொண்டு தயாரிக்கப்படும் சிறிய துணி முடிச்சு

பிறந்த பூமியல்லவா! “கொல்லம் கண்டா, இல்லம் வேண்டா எண்ட பாரியாள் அவள்ட சேச்சிகள் பறையும்.
கொல்லத்தில் ஹாஸ்பிட்டல் இருக்கும் இடம் காங்கத்துமுக்கு. டாக்டரின் மகன் பெயர் டாக்டர் விஷ்னு
பிரபஞ்ச வர்த்தமான குழம்பு - பஞ்சகர்மா - நவரத்ன கிளி என்று இன்னும் பல இருக்கின்றது

 












ஆமணக்கு

 மாத்திரை, கிளி

 பாபு
ஷொய் ஜூ

 ஸந்தோஷ்


Friday, July 1, 2016

52. ஆயுர் வேதம் ஆரோக்கியம் கூட்டும் 2 !

ஆயுர் வேதம் ஆரோக்கியம் கூட்டும் 2 !

 ஆடு தொடா  இலை 

எருக்கு 

கரு நொச்சி 

இந்த வருடம் (2016) ஆனி மாதத்தில் கேரளாவில் மழைக்காலம் ஆரம்பித்தது. மறுபடி மூன்றாம் வருடமாக (ஜூன் மாதம் பிற்பகுதியில்) எண்ணை போட கொல்லம் வந்து சேர்ந்தோம். “கொல்லம் கண்டா இல்லம் வேண்டா என்பது பழமொழி

முன்கூட்டியே காரைக்குடியிலிருந்து ஃபோன் செய்து வைத்தியர் இருப்பாரா, அறைகள் கிடைக்குமா என்று கேட்டுத் தெரிந்து கொண்டு புறப்பட்டு வந்தோம்.

காலை 10 மணிக்கு வைத்தியர் எங்கள் குறைகளைக் கேட்டு அறிந்து மருந்தாளுனரிடமும் (pharmacist) எண்ணை தேய்ப்பவரிடத்திலும் (physiotherapist) விபரங்களைக் கூறிவிட்டார். கற்கடக பருவ காலமாதலால் கூட்டம்தான். ஒரு ஆளுக்கு எண்ணை தேய்க்க ஒரு மணி நேரம் ஆகும். காலை 5.30 முதல் உள்ளூர்வாசிகள் வர ஆரம்பிக்கிறார்கள். 9 மணிக்கு மேல் வைத்தியசாலையில் தங்கி இருப்பவர்களுக்கு ஆரம்பிக்கிறார்கள்.

இரண்டு பேருக்கு சாப்பாடு, மருந்துகள், அறை வாடகை, எண்ணை தேய்க்க என்று 11 நாட்களுக்கு சுமார் 28,000 ரூபாய் வரை ஆகலாம்..

ஆண்களுக்கு ஆண்களும் பெண்களுக்கு பெண்களும் எண்ணை தேய்க்கிறார்கள். ஆனால் “Dress code” என்ன   “loin cloth” தான்!!

முதலில் ஒரு நாற்காலியில் உட்கார வைத்து உச்சந்தலையில் எண்ணை வைத்துத் தேய்க்கிறார்கள். பிறகு கழுத்திலும் முதுகிலும் தேய்த்து, தடுமன் பிடிக்காதிருக்க ராஸனாதிப் பொடியும் தேய்த்துவிடுகிறார்கள். தந்வந்த்ர எண்ணையில் முருக எண்ணையும், கற்பூர எண்ணையும் கலந்து (சுமார் 1 ½ லிட்டர்) சூட்டோடு தேய்க்கிறார்கள்.



அதற்கென காஞ்சீர  மரத்தால் செய்யப்பட்ட மேஜையில் கால்களை நீட்டி உட்காரச் சொல்லி இரண்டு பக்கமும் இருவர் நின்று சூடான எண்ணை கொண்டு அழுத்தித் தேய்ப்பார்கள். நம்மை உட்கார வைத்து கைகளை மஸாஜ் செய்வார்கள்.

பிறகு குப்புறப் படுக்க வைத்தும், மல்லாக்க படுக்க வைத்தும் கை விரல் முதல் கால் விரல் வரை அழுத்தி நீவி விடுவார்கள்.

வலி இருக்கும் இடத்தில் சற்று நேரம் கூடுதலாகவும், அழுத்தம் கூடுதலாகவும் தேய்த்து விடுவார்கள்.

அதன் பின் நீராவிக் குளியலில் நன்கு வேர்க்கும்வரை அல்லது நம்மால் தாங்க முடிந்த வரை இருக்க வேண்டும். துர்நீர் வெளியேறவும் மருந்துகளின் குணங்கள் உள்ளேறவும் பயன் படுகின்றது இது. இதற்காக பிரத்யோகமாக காட்டுப் பலா (அய்னி/அஞசிலி) மரத்தாலான பெட்டி ஒன்று உண்டு. அதனுள் ஒரு நாற்காலியும் உண்டு. பிரஷர் குக்கரிலிருந்து வரும் ஆவி உள்ளே செலுத்தப் படுகிறது. தலை மட்டும் வெளியே தெரியும்படி கதவைச் சாத்தி விடுவார்கள்


இறுதியாக கடலை மாவு தேய்த்து சுடு தண்ணீரில் குளித்து ராஸனாதிப் பவுடரை முகர்ந்து பார்த்து, உச்சந்தலையில்  தேய்த்துக்கொண்டு வரலாம்.

இள்ஞ்சூட்டில் எண்ணையை மஸாஜ் செய்வதால் உடம்பில் உள்ள நாடி நரம்புகள் தசைகள் இளகி ரத்த ஓட்டம் சரியான முறையில் நடைபெறும். எண்ணையில் உள்ள மருத்துவ குணங்களும் பயன்படும். மூட்டு வலியும் குறையும். பசி கொடுக்கும். மேலும் அழுத்தி மஸாஜ் செய்பவதால் கல்சியம் படிந்து இறுகிப்போன எலும்பு இணைப்புகளும், தசையை எலும்புடன் இணைக்கும் நார்களும் இள்கி தளர்வு கொடுக்கும். இது முதல் 3-5 நாட்களுக்கு நடக்கும். பிற்கு உடலுக்கு பலமூட்டவும், மறுபடியும் வராமல் தடுக்கவும் (கிளி) சிகிச்சை தொடரும். எண்ணை தேய்த்ததைப் போலவே கிளி முடிச்சையும் சூடான எண்ணையில் நனைத்துத் தேய்ப்பார்கள்.


athira, sutha, prasanna senior