Labels

Wednesday, April 30, 2014

46. ஒரு மாதிரியானதெல்லாம் ஒரே மாதிரியல்ல ! Chemistry


Chemistry, a mystery for many
வேதியியல் ஒரு புதிராபுதிரல்ல! கற்கும் முறை சரியில்லை.

இமயமலை என்ற உடன் ^ கோபுரம் போன்ற தோற்றமும் பனியும்தான் ஞாபகத்திற்கு வரும். அதுபோல CuSO4 என்ற உடன் சி யூ எஸ் ஃபோர் என்று படிக்காமல் காப்பர் ஸல்ஃபேட் , “ஊதாஆ கலருகிறிஸ்டல் என்று ஞாபகத்திற்கு வர வேண்டும்! அப்போதுதான் வேதியியல்புரிய வேண்டிய முறையில்புரிந்திருக்கிறது என்று அர்த்தம். அப்படிப் புரிய என்ன செய்ய வேண்டும்?

ஒரு மொழியைப் படிக்க ஆரம்பிக்கும்போது எழுத்து, வார்த்தைகள், வாக்கியங்கள் என்று படிப்பது போல வேதியியலைப் (chemistry} படிக்க ஆரம்பிக்கும்போது குறி, சூத்திரம், சமன்பாடு (symbols, formula, equations) என்று மனனம் செய்ய வேண்டும். அதேபோல 3Rs of Chemistry, அதாவது வாசிப்பது, எழுதுவது, கணக்குகள் போடுவது என்று முறையாக அவசரமில்லாமல் படிக்க வேண்டும். இவை நன்கு தெரிந்த பின்தான்  மற்ற chaptersக்குப் போக வேண்டும்.

டாக்டர் அறிவொளி ஒரு கதை சொல்வார். ”ஒரு மாதிரியானதெல்லாம் ஒரு மாதிரி தானே தவிர ஒரே மாதிரியல்ல”. மனநல மருத்துவ மனையில் ஒரு அறையில் அடைக்கப் பட்டிருந்த ஒருவர்லைலா, லைலாஎன்று கத்திக் கொண்டிருந்தார். வந்திருந்த பார்வையாளர்களில் ஒருவர்இவர் ஏன் இப்படிக் கத்திக் கொண்டிருக்கிறார்என்று கேட்டார். அதற்கு அங்கிருந்த காப்பாளர்இவர் லைலாவைக் காதலித்து இப்படி ஆயிட்டார்என்கிறார். சில அறைகள் தாண்டி மறுபடி ஒருவர் அதே போல லைலா லைலா என்று கத்திக் கொண்டிருந்தார். உடனே பார்வையளர் காப்பாளரிடம்எனக்குத் தெரியும். இவரும் லைலாவைக் காதலித்துத்தான் இப்படி ஆயிட்டார்என்றார். காப்பாளர்இல்லீங்க இவர் லைலாவைக் கலியாணம் பண்ணித்தான் இப்படி ஆயிட்டார்என்றாரே பார்க்கலாம்!

பெரும்பாலான மாணவர்கள் CI, Cl- , Cl2 எல்லாவற்றையும் குளோரீன் என்றே வாசிப்பார்கள். எல்லாமே ஒரு மாதிரியாக இருந்தாலும் ஒரே மாதிரியல்ல’!
CI chlorine atom அனு
Cl- chloride ion அயனி
Cl2 chlorine molecule மூலக்கூறு

 இவைகளின் வேதிவினைகள், (reactions) வெவ்வேறானவை. ஆகவே தவறாக வாசித்தால் அவைகளின் reactions யையும் தவறாகத்தான் புரிந்து கொள்வார்கள். ஒரு மாதிரியானதெல்லாம் ஒரே மாதிரியல்ல !

ஆக கால தாமதம் ஆனாலும் symbols, formula, equations ஆகியவற்றை நன்கு மனனம் செய்யாமல், அடுத்தடுத்த chapters ஆசிரியர் நடத்திக்கொண்டு செல்வதும் தவறு. மாணவர்கள் அப்படிப் படிப்பதும் தவறு. நல்ல அஸ்திவாரம் இல்லாமல் மேலேமேலே கட்டிக் கொண்டு சென்றால் என்னவாகும்?


Chemistry is observation, Physics is aaccuracy!?

Saturday, February 8, 2014

45. yoga vil ’நடுவில கொஞ்சம் தகவலைக் காணோம்’ !

ஆஹா யோகா’ 

ஒரு பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருக்கிறீர்கள். பல வாகனங்கள் உங்களைக் கடந்து சென்று கொண்டிருக்கின்றன. திடீரென்று ஒரு கன ரக வாகனம் ஃபுல் லோடு ஏற்றிக் கொண்டு செல்கிறது. உங்கள் இதயம் அதிர்வது போன்று உணர்கிறீர்கள். ஏன்?

பஸ்ஸில் அமர்ந்திருக்கிறீர்கள். ஒரு குறிப்பிட்ட வேகத்தில் பஸ் செல்லும்போது பஸ் பாடி, ஜன்னல்கள் அதிர்வதைப் பார்க்கிறீர்கள், அல்லது உண்ர்கிறீர்கள். அதற்குக் குறைவான வேகத்திலோ அல்லது நன்கு வேகமாகப் போகும்போதோ அப்படிப்பட்ட அதிர்வை உணர்வதில்லை! ஏன்?

பத்தாம் வகுப்பில் இயற்பியலில் படித்துப் புரிந்து கொண்டிருக்க வேண்டிய ஒத்ததிர்வு அல்லது ‘resonace’ எனப்படுவதாகும் அது!

யோகாவிற்கும் அதற்கும் என்ன சம்பந்தம்?

எந்த ஒரு அலைபோல் அதிர்வுறும் பொருளும் மேலும் கீழும் அசையும் போது, இடம் பெயர்ந்து, ஒரு நிலையான மைய்யப் புள்ளியை நோக்கியே மீண்டும் மீண்டும் வரும். அந்த இடப் பெயர்ச்சியின் அளவிற்கு வீச்சு அல்லது amplitude என்று பெயர்.

ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு இயற்கையானஇயல் அதிர்வெண்’ (natural frequency) உண்டு. அந்த frequency யில் அது அதிர்வுறும் பொழுது அதன் வீச்சு பெருமமாக, maximum amplitude இருக்கும்.

ஒரு பொருளின் மீது அதிர்வுகளை செயற்கையாகத் (driver frequency) திணிக்கும்போது திணிப்பதிர்வெண் எண்ணிக்கையிலேயே அதிர்வடையும். ஆனால் வீச்சு பெருமமாக இருக்காது.

புறத்திலிருந்து வரும் விசை அதிர்வெண் (driver frequency) ஒரு பொருளின் இயல் அதிர்வெண்ணுக்கு ’natural frequency’ சமமாக இருப்பின், அப்பொருள் அதிக பட்ச வீச்சைப் பெறும். புறவிசையின் அதிர்வு எண்ணிக்கை இயற்கை/இயல் அதிர்வெண்ணுக்குக் கூட இருந்தாலும், குறைவாக இருந்தாலும் ஒரு பொருள் அதே frequencyயில் அதிர்வுறும்; ஆனால் வீச்சு பெருமமாக இருக்காது.

Every object has a natural frequency, at which it vibrates with maximum amplitude. Even otherwise it vibrates, but not with maximum amplitude. When a driver frequency from outside forces upon an object to let it vibrate with the same frequency as the natural frequency of the object, it vibrates with maximum amplitue and hence the vibrations of the object can be felt or seen. 

When the fully loaded container lorry passes by you, and if the speed of the engine is same as the the natural frequency of your heart, about 3 Hz , then it lets your heart vibrate with maximum amplitude and you can feel your heart thumping

When the bus engine speed is the same as the natural frequency of the bus body, the bus body vibrates with maximum amplitude and you can feel it.

சப்தமும் யோகாவும்
மேலே குறிப்பிட்ட ஒத்ததிர்வுதான் யோகா பயிற்சியின்போது எழுப்பப்படும் ஆ,ஊ.ம் (a u m) aum எனும் ஓசையின் அடிப்படை.
’ எனும் சப்தம் கீழ் வயிற்றின் இயல் அதிர்வெண்ணுடன் ஒத்திருப்பதால் அந்தப் பகுதியில் வீச்சு/அதிர்வு பெருமமாக
ஏற்பட்டு இரத்த ஓட்டத்தை அதிகமாக்கும். இரத்த ஓட்டம்தான் கழிவுகளை நீக்குவது. இதே போன்றுதான் ‘ஊ’ எனும் சப்தம் நெஞ்சுப்பகுதியிலும், ‘ம்’ எனும் சப்தம் தலைப் பகுதியிலும் அதிர்வுகளை உண்டாக்கி வீச்சை அதிகப்படுத்தி உறுப்புகளின் செயல் பாடுகளை மேம்படுத்துகின்றது.

மூச்சும் யோகாவும்
நுரையீரலின் சாதாரண அளவு சுமார் 3000 cm சிரமப்பட்டு வேகமாக மூச்சை இழுத்தால் 6000 cm3 வரை கொள்ளும். அதேபோல் சிரமப்பட்டு வேகமாக மூச்சை வெளியேற்றினால் மீதம் 1000 cm3 தான் கொள்ளும்சாதாரணமாக மூச்சை வெளியேற்றினால் 1200 cm3 காற்று உள்ளே மீதம் இருக்கும். இதற்கு ‘residual air’ என்று பெயர். சாதாரணமாக ஒவ்வொரு முறை மூச்சை இழுக்கும்போதும், வெளியேற்றும்போதும் 500 cm3 காற்றுதான் பரிமாற்றம் ஆகும். இதற்கு ‘tidal air’ என்று பெயர்.


கபாலபதி செய்யும்போது residual air ஐயும் வேளியேற்றுவீர்கள். அதாவது எப்பொதும் உள்ளேயே இருக்கும் 1200 cm3  காற்றையும் மாற்றுகிறீர்கள். இது அதிக பிராண வாயுவைத் தருகிறது. தங்கிப் போன காற்றின் துர் நாற்றத்தையும் அகற்றுகிறது. மேலும் கபாலபதி தலைக்கு உள்ள இரத்த ஓட்டத்தை அதிகப் படுத்தும். மைக்ரேய்ன் ‘migraine’ உள்ளவர்கள் பலர் குணமடைந்ததாகக் கூறியுள்ளனர். ஆனால் மருத்துவ பிரச்சினைகள் உள்ளவர்கள் அவர்களது குடும்ப மருத்துவரைக் கலந்து ஆலோசிக்காமல் ’ கபாலபதி’ செய்யவே கூடாது.

யோகா செய்ய உட்காரும்போதுதான் பலர் நமக்கு இழைத்த அநீதிகளெல்லாம் ஞாபகத்திற்கு வரும்! அதனால்தானோ என்னவோ யோகா ஆசிரியர்கள் எல்லாம் ஒவ்வொரு நிலையைச் செய்யும்போதும் ‘உறுப்பின் மீது கவனம்’, ’எண்ணிக்கையில் கவனம்’ என்று சொல்வர்

நமது நுரையீரலின் கொள் அளவை அறிந்து கொள்ளவும் மேம்படுத்தவும் கீழ்கண்ட ஸ்பிரோமீட்டரைப் பயன்படுத்திப் பார்க்கலாம்

Photo of spirometer



யோகா கற்றுக் கொள்ளும்போது நீங்கள் ஆசிரியரிடம் கேட்டு எடுத்துக் கொள்ள வேண்டிய குறிப்புகள்
  1. 1.   நிலை
  2. 2.   செய்முறை
  3. 3.   கவனம் செலுத்த வேண்டிய இடம்
  4. 4.   பயிற்சிக் குறிப்பு
  5. 5.   நடைக் குறிப்பு
  6. 6.   பயன்கள்


யோகா செய்வதன் மூலம் சிறிது பிராண வாயுவை ‘oxygen’ நம் நம் உடலில் சேமித்து வைத்துக் கொள்கிறோம். மற்ற உடற்பயிற்சிகளில் ஆக்ஸிஜனை உபயோகப்படுத்துகிறோம். மேலும் மனப் பயிற்சியும் (பக்குவமும்) உணவுப் பழக்க வழக்கங்களையும் கற்றுக் கொள்கிறோம்.

Knowledge is wealth. But imparting  does not reduce it
கொடுக்கக் கொடுக்கக் குறையாத செல்வம் கல்வி ஒன்றே
Roots of Education are Bitter but the Fruit is sweet
கல்வியின் வேர்கள் கசப்பானவை, கனிகளோ இனிப்பானவை
Learn through others experience.......you stay young!                                                              
வாழ்க்கை சாதிப்பதற்காக, பரிசோதிப்பதற்காக அல்ல,
அடுத்தவர் அனுபவம்; நாம் பயன்படுத்த வேண்டியது!
நாமே அனுபவப்பட்டு தெரிந்து கொண்டால், வயதாவதுதான் மிச்சம்

Life's treasures are people .................. together!
வாழ்க்கையின் பொக்கிஷமே மக்கள்தான்……….இயை(ணை)ந்து வாழும்போது!





Wednesday, January 1, 2014

44. குடும்பங்கள் கூடவேண்டும்



பிரிந்தவர் கூடினால் ! !

முதலில் இந்தத் தலைப்பே சரியா என்ற கேள்வி என்னுள் எழுந்தது; தொழில் நிமித்தமாக வசிப்பிடத்தால் பிரிந்திருந்தாலும், மனதளவிலும் சமூகவலைத் தளங்கள் ஊடாகவும் இணைந்து இருப்பவர்கள்தானே நாம்? இருந்தாலும் அவ்வப்போது நேரில் சந்திப்பதுபோல் வருமா? அப்படி சமீபத்தில் நேரில் சந்தித்து மகிழ்ந்த உறவினர்கள் பற்றிஉங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

பெண் குழந்தைகள் கலியாணம் ஆனவுடன் வேறு குடும்பங்களுடன் ஐக்கியமாய் விடுவர்ஆனாலும் நாம் பெண்கிளைபெருங்கிளைஎன்றுதான் சொல்வோம். அப்படி மேற்கொண்ட மறு சந்திப்பு நிகழ்ச்சிதான் கோட்டையூர் சி..சி. வகையறா பேத்திகளும் அவர்களின் வாரிசுகளும் மேற்கொண்ட சந்திப்பு (S.A.S Family Reunion) நாள்: 29-12-2013, ஞாயிற்றுக் கிழமை.

Employers  to employees என்று மாறிய சமூகத்தை (இளையசமுதாயத்தை) Employers ஆக மாற்ற வேண்டும் என்பது சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்த நகரத்தார் உலக வர்த்தக மாநாட்டின் குறிக்கோளாக இருந்தது.

நம் குழந்தைகளுக்கு நம் முன்னோர்களின் சாதனைகளையும், அவர்கள் சந்தித்த சோதனைகளையும், அதனிலிருந்துமீண்டு வந்ததையும், குலப் பெருமையையும், அதனை அவர்கள் காப்பாற்ற வேண்டியதின் அவசியத்தையும், அவரவர் பெரியப்பச்சி, பெரியய்யா, பெரியாயா/அப்பத்தா, மாமா, அத்தை போன்றவர்களின் வாயிலாக நேருக்குநேராகக் கேட்கவைப்பதும் பெரியவர்களுக்கு business தொடர்புகள் கொள்ள வாய்ப்பளிப்பதும்தான் நமது நோக்கமாக இருந்தது. இவை பெரும்பாலும் நிறைவேறியது!

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் வரும் கானத்தூரில் உள்ள பூரி ஜெகந்நாதர் கோவில் அருகே உள்ள பங்களாவில் சந்தித்தோம். இது காரைக்குடி ஹோட்டல் சிருங்கார் நிறுவனரால் நடத்தப்பெறுவது என அறிந்தோம். பங்களா, மண்டபம், தோட்டம்எனசுமார் 20,000 சதுரஅடிஇருக்கும்.

சந்தித்துச் சந்தோஷப்பட்ட குடும்பங்கள் முப்பத்தி ஒன்று, 31.  நபர்கள் 85. அமெரிக்கா, ஹாங்காங், குவைத், சிங்கப்பூர், நாகர்கோயில், மதுரை, சென்னை, காரைக்குடி மற்றும் பல ஊர்களிலிருந்து வந்திருந்தார்கள்.

நிகழ்ச்சிக்கு வித்திட்டவர்கள், ஏற்பாடுகள் செய்து நடத்தியவர்கள்: திரு லட்டுகண்ணன் (சுப. லெஷ்மணன்) காசி நகரச்சத்திரச் செயலாளர் ராமனாதன் (கொத்தமங்லம்), சுதா (நாகம்மைலெஷ்மணன்) அவர்களும்.

நிகழ்ச்சிநிரல்

08.30 - 09.30
வருகை, காலைஉணவு
09.30 - 10.30
ஜெகந்நாதர் கோவிலில் காசிவிஸ்வநாதர், காஞ்சிவிநாயகர், ஜெகந்நாதர்(கிருஷ்ணர்), பலராமன், சுபத்ரா தரிசணம்.
10.30 - 11.30
Thumb Charade
11.30 – 01.00
முன்னோர்களைப் பற்றிய நிகழ்ச்சிகளைப் பகிர்ந்துகொள்ளல்இதுதான் மிக முக்கியம்.
1 – 2
மதியஉணவு, கலந்துரையாடல்
02.00 - 02.30
பழமொழித் துண்டுகளை ஒன்றுசேர்ப்பது 15-24வயது
02.30 – 03.00
பெற்றோர் சொல்ல சொல்ல, கண்ணைக்கட்டிக்கொண்டு 3-5 வயது குழந்தைகள் ஒரு படத்தை முழுமை செய்வது
03.00 - 03.30
பெண்களுக்கான ping-pong-name எனும் நிகழ்ச்சி
03.30 - 04.00
ஆண்களுக்கான ping-pong-name எனும் நிகழ்ச்சி
4
டீ சிற்றுண்டி
04.00 - 04.30 
musical chair for youngsters
04.30 - 5.00  
slide show, Family Tree, பாட்டையா, பாட்டியாயா முதலானோர் போட்டோக்களைப் பார்த்து,
          வந்திருந்தவர்கள் நினைவு கூறல்.
05.00 – 06.00
ஒருவருடன் ஒருவர் சந்திப்பு. இப்போது நெருக்கமாகி விட்டார்களல்லவா!
6.30
Pack செய்யப்பட்ட இரவு உணவுடன் அனைவரும் பயணம்.

வந்திருந்தவர்களிடம் பின் தொடர்புகொள்ள வீட்டு விலாசம், முகவரி, தொடர்பு எண்கள், மின்னஞ்சல் முதலியவை பரிமாற்றம். அதுவரை எடுத்த புகைப்படங்களின் பரிமாற்றம்.

நிகழ்ச்சிகளை compere செய்து சுதா லெஷ்மணன் தொய்வில்லாமல் நடத்திச் சென்றது மெச்சத் தகுந்தது.

இனிமேலும் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்த நினைப்பவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இக்கட்டுரை இருக்கும் என நம்புகிறேன்..