Labels

Wednesday, July 6, 2016

53. ஆயுர்வேதம் ஆரோக்கியம் கூட்டும் 3 !








ஆயுர்வேதம் ஆரோக்கியம் கூட்டும் 3 !

ஆடி மாதம் ஆயுர்வேத எண்ணை போடல் ஆரோக்கியம் கூட்டும்.

கதகளி ஆட்டக்கார்ர்கள் 80 – 90 வயது வரை ஆரோக்கியமாக ஆடுவதற்குக் காரணம் எண்ணை போடல் ஆகும்.

நாம் ஏன் நமது ஆரோக்கியத்தைப் பேண வேண்டும்
1.   மற்றவருக்குத் தொந்தரவு கொடுக்காமல், நம் அடிப்படைத் தேவைகளை நாமே நிறைவேற்றிக் கொள்ள
2.   நமது அனுபவம் மற்றவர்களுக்குப் பயன்பட
3.   குடும்பத்தினர், உறவினர் ஆகியவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள், உதவிகள் ஆகியவற்றை நிறைவேற்ற
  
ஆடி மாதத்தை கற்கடகம், ராமாயண மாதம், பஞ்ச மாதம், ஆயுர்வேத மாதம் எனவும் கேரளாவில் கூறுவார்கள். ஆனி 15 முதல் மழையும், வெய்யிலும், காற்றும் தினசரி, உடனுக்குடன் மாறி மாறி வரும். தக்‌ஷினாயன த்தில் சூரியன் பூமிக்கு மிக அருகில் இருக்கும் காலமாகும் இது. வர்ஷ ரிதுமழை சீஸன்என்கிறார்கள். இது வாத பூமியாகும். இந்தப் பருவத்தில் பச்சைக் காய்கறிகளில் துவர்ப்பு, புளிப்பு கூடும். பல நோய்கள் உண்டாகவும் பரவவும் ஏதுவான காலமாகும். அதனிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கற்கடக கஞ்சி குடிப்பார்கள். எண்ணெய் போட்டு உடலை வலுப்படுத்திக் கொள்வார்கள். வேலைக்குச் செல்பவர்கள் காலை ஐந்தரை மணிக்கே வந்து எண்ணெய் போட்டுச் செல்கிறார்கள். சுக சிகிட்ஷா என்கிறார்கள்

தமிழகத்தைப் போல் இங்கும் (கேரளாவில்தான்) ஆடி அமாவாசை, ஆடித் திருவாதிரை ஆகிய விழாக்களை விஷேசமாகக் கொண்டாடுகிறார்கள். ராமாயணத்தை வீடுகளிலும், விஷ்ணு கோவில்களிலும் படிக்கிறார்கள்.

பிரேஸில் கால் பந்தாட்ட வீரர் நெய்மாருக்கு 2014ல் அவரது காயங்களுக்கு சிகிச்சை அளித்து முன்போல் விளையாட கேரள அரசு உத்தரவாதம் அளித்து அழைப்பு விட்டிருந்தது.

குடிதண்ணீரில் -  தாக சமனி - பதிமுகம் எனும் மரத்திலிருந்து மரத் துகள்களை வைத்துத் தயாரிக்கப்படும் பவுடர். இதை தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்துக் குடிக்கிறார்கள். கிருமிநாசினி.. இதில் தாகம் தவிர்க்கும் செங்கருங்காலியும் சிறிதளவில் வெட்டிவேர், நன்னாரி, சுக்கு, மல்லி, கரிங்கலி முதலியவைகளும் கலந்திருக்கும்.

உட்கொள்ள மருந்து - திரிபலம் – மூன்று பழம் – கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய். இவை  மலமிளக்கி, ஜீரண சக்தி, இரத்த சுத்திகரிப்பு என செயல் படுகின்றன.
அஷ்டவர்க்க கஷாயம் - 8 விதமான இயற்கை மருந்துகள் - இரவிலும், காலையிலும் -  வயிற்றுப் பொருமல், மூட்டு வலிகளைப் போக்கும். மற்ற மாத்திரைகள் தேவையைப் பொறுத்துத் தருகிறார்கள்.

தலைக்குபலாசு அஷ்வகந்தாதீ லஷாதி தைலம்

தலைக்கு - ராஸநாதி சூரணம் - ஜலதோஷம் வராமல் தடுக்க

உடம்புக்கு தேய்த்துக்கொள்ள - கற்பூர, கொத்தஞ்சுக்காதி, முருக, தன்வந்த்ரம் கலந்த எண்ணை – வாத பித்த கப உடம்பைப் பொருத்து

கிளிவெள்ளைப் பூண்டு, தேங்காய், கருநொச்சி, ஆடுலோடகம்(ஆடுதொடா), ஆமணக்கு, எருக்கு, கொத்த்ஞ்சுக்காதி, புளி இலை, முருங்கை, புங்க இலை, நார்த்த இலை இவற்றில் சில கொண்டு தயாரிக்கப்படும் சிறிய துணி முடிச்சு

பிறந்த பூமியல்லவா! “கொல்லம் கண்டா, இல்லம் வேண்டா எண்ட பாரியாள் அவள்ட சேச்சிகள் பறையும்.
கொல்லத்தில் ஹாஸ்பிட்டல் இருக்கும் இடம் காங்கத்துமுக்கு. டாக்டரின் மகன் பெயர் டாக்டர் விஷ்னு
பிரபஞ்ச வர்த்தமான குழம்பு - பஞ்சகர்மா - நவரத்ன கிளி என்று இன்னும் பல இருக்கின்றது

 












ஆமணக்கு

 மாத்திரை, கிளி

 பாபு
ஷொய் ஜூ

 ஸந்தோஷ்


No comments:

Post a Comment