Labels

Wednesday, January 4, 2017

57. துணுக்குகள் – Tit-Bits

தோல உரிச்சு உப்புப் போட்ருவேன்”, உப்புத் தண்ணீல கொப்பளிங்க

தொண்டை கரகர என்று ஆரம்பிக்கும்போதே உப்புத் தண்ணீரில் கொப்பளித்தால் ஜலதோஷத்தைத் தவிர்த்துவிடலாம் என்பர். நோய்க்கிருமிகள் 2,4,16,256 என்ற் கணக்கில் பெருகுவதால் நம் உடல் 2 மணி நேரத்தில் அதன் வசமாகிவிடும். ஆகவே இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வாய் கொப்பளிக்க வேண்டும். சரி. எவ்வளவு உப்புப் போடவேண்டும்? “தோல உரிச்சு உப்புப் போட்ருவேன்என்பார்களே அந்த அளவிற்கா? அதிகமாக உப்புப் போட்டால் தொண்டை ரண களமாகிவிடும்!! தண்ணீரில் உப்புப் போட்டிருக்கிறது என்று லேசாகத் தெரியுமளவுக்குப் போட்டால் போதும்.

மருந்தின் அளவு

ஒரு மருந்து செயல்பட உகந்த, குறைந்த பட்ச அளவு தேவைப்படும். அந்த அளவிற்கு குறைந்து இருந்தால் அது நமது உறுப்புகளைச் செயல்படத் தூண்டி விட முடியாது. அதற்கு மேல் மிக அதிகமாக இருந்தாலும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். 2mg  என்றால் பெரும்பாலான generic மருந்துகளில் 2 mg என்று சொன்னாலும் அப்படி இருப்பதில்லை என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஆகவே ஒரு pharmacist அல்லது மருத்துவரைக் கலந்து ஆலோசித்தபின் generic மருந்துகளை வாங்கவும்.

யோகா பயிற்சிகளை மிக மிக மெதுவாக-மெல்ல- செய்யவும்

அது அரசு 
40 ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூரில் தொலைபேசிக் கட்டணங்கள், 3 நிமிடங்களுக்கு, 20 காசிலிருந்து 10 காசாக்க் குறைக்கப்பட்டது. எல்லாருக்கும் ஆச்சரியம். இதற்கு திரு லீ குவான் யூ கூறியது. ஒரு தவகலைச் சொல்வத்ற்கு பேருந்தில் ஏறிச் சென்று சொல்வதென்றால் 20-60 காசுகள் சிலவாகும். பெட்ரோலை இறக்குமதி செய்ய அந்நியச் செலவாணி வேண்டும். நேரமும் வீணாகும். தொலைபேசிக் கம்பிகள் ஒருமுறை நிறுவப்பட்டால் போதும் பராமரிப்புச் சிலவுகள் குறைவு. பல வருடங்களுக்குப் பயன் அளிக்கும். கட்டணத்தைக் குறைப்பதால் பயனீட்டாளர்கள் அதிகரிப்பர். ஆகவே இதனால் அரசாங்கதின் அனாவசியச் சிலவு குறைவதோடு பொது மக்களுக்கும் பலன் உண்டு.இதை அரை மணி நேரத்திற்கு ஒருமுறை வானொலியில் சொல்லிக் கொண்டே இருப்பர்கள். இந்தியாவில் சிலோன் வானொலியும் மலேசியாவில் சிங்கபூர் வானொலியும் அப்போது பிரபல்யம். நமது தினமலரைப் போல அங்கும் பத்திரிக்கைகளில் இதுபோன்ற் செய்திகளை சிறு சிறு வாக்கியங்களில் இலவசமாக வெளியிடுவார்கள்.